மதமாற்ற வந்தவர்களை ஓட விட்ட கிராம மக்கள்!

மதமாற்ற வந்தவர்களை ஓட விட்ட கிராம மக்கள்!

Share it if you like it

திரிபுராவில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பழங்குடியினர் பகுதியில் மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவ மிஷநரிகளை கிராம மக்கள் துரத்தி அடித்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஏழை, எளிய மக்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து அவர்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ஆட்டி படைப்பதே மதமாற்றம் என்று சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை சிதைக்கும் முக்கிய புள்ளியாக மதமாற்றம் இருந்து வருகிறது. மருத்துவம், யோகா, ஆன்மீகம், உணவு என அனைத்து உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்காக இந்தியா திகழ்ந்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த மோகன் சி லாசரஸ், எஸ்றா. சற்குணம் மற்றும் சாது சுந்தர் செல்வராஜ் உட்பட பல கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்து மதத்தில் சொல்லாத கருத்துக்களை தங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து அப்பாவி மக்களை குழப்பி வருகின்றனர். மேலும், அவர்களை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்து வருவதாக பல சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் கலாச்சாரத்தை அழித்தொழிக்கும் விதமாக கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மதமாற்றத்தை மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் என பல்வேறு சூழ்ச்சிகளை செய்து இந்தியாவையே மதமாற்றம் செய்து விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு அலைந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவ மிஷநரிகள் தங்களது பார்வையை பழங்குடியினர் சமூகத்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர். அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பழங்குடியினர் பகுதியை இவர்கள் குறிவைத்து தங்களது கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். மிஷநரிகளின் சூழ்ச்சியை அறிந்து கொண்ட, அவ்வூர் கிராம மக்கள் அவர்களது கூடாரங்களை அப்புறப்படுத்தி அவர்களை விரட்டி அடித்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it