தீபாவளி இனிப்பில் விஷம்: அப்துல்லா, அப்பாசி கைது!

தீபாவளி இனிப்பில் விஷம்: அப்துல்லா, அப்பாசி கைது!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், தீபாவளி இனிப்பு பலகாரங்களில் விஷம் கலந்திருந்ததாக அப்துல்லா, அப்பாசி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஹிந்துக்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த விஷம் கலந்த ரசகுல்லா, மாவா, கோவா ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அதேபோல, சில குறிப்பிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் அவ்வப்போது ஏதாவது பிரச்னைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலும், அதன் அருகாமையில் இருக்கும் பகுதிகளிலும் வசிக்கும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள், பெண்கள், இஸ்லாமிய இளைஞர்களால் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். கடந்த இரு மாதங்களில் மட்டும் இதுபோன்ற 5-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அரங்கேறி, அப்பாவி பட்டியலின சிறுமிகள் 5 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், இஸ்லாமியர்கள் இருவர் தீபாவளி இனிப்பு பலகாரத்தில் விஷம் கலந்ததாக தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துல்லா மற்றும் அப்பாசி. இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரசகுல்லா, மாவா, கோவா ஆகிய இனிப்பு வகைகளை தயார் செய்து, ஹிந்துக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால், ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன், மேற்கண்ட இனிப்பு வகைகள் அனைத்திலும், அவர்கள் விஷம் கலந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் மீரட் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட இடத்தில் சோதனையிட்ட போலீஸார், இனிப்பு வகைகளில் விஷம் கலந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர், அப்துல்லா, அப்பாசி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இருவரும் ஹிந்துக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 200 குவிண்டால் ரசகுல்லா, 52 குவிண்டால் மாவா, 40 குவிண்டால் கோவா ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுகுறித்து இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராதாராமன் தாஸ் மற்றும் யூடிப்பருரும், செய்தியாளருமான அஸ்வினி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், அப்பதிவில் இனிப்பு வகைகளை போலீஸார் பறிமுதல் செய்து அழிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு செய்திச் சேனலின் வீடியோவையும் இணைத்திருக்கிறார்கள். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ராதாராமன் தாஸ் தனது பதிவில், இதுபோன்ற சம்பவங்களால்தான் இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்குமாறு ஹிந்துக்கள் கூறிவருகிறார்கள். ஆனால், அவர்களை போலீஸார் கைது செய்து வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம் வெறுப்பை விதைப்பவர்களை கைது செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it