என் செல்லகுட்டி ஆ.ராசாக்கு ஒரு கேள்வி: எதுக்கு துர்கா ஸ்டாலினை திட்டின – இணையதளவாசி சரமாரி கேள்வி!

என் செல்லகுட்டி ஆ.ராசாக்கு ஒரு கேள்வி: எதுக்கு துர்கா ஸ்டாலினை திட்டின – இணையதளவாசி சரமாரி கேள்வி!

Share it if you like it

ஹிந்துக்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை தேனியை சேர்ந்த இணையதளவாசி ஒருவர் வறுத்தெடுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவர், திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு சென்னையில், சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், வி.சி.க. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மற்றும் தி.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தி.மு.க. எம்.பி. ஆ. ராசா பேசும் போது இவ்வாறு பேசினார்;

நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர், விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார். 

ஆ.ராசாவின் அருவருக்கதக்க பேச்சு, தமிழகத்தையும் கடந்து இந்தியா முழுவதும் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. ஆ.ராசாவின், பேச்சை கண்டித்து இந்து முன்னணி, வி.ஹெச்.பி. மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தன. தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், தேனியை சேர்ந்த இணையதளவாசி ஒருவர் தி.மு.க. எம்.பி. ஆ. ராசா குறித்து இவ்வாறு பேசினார்;

இந்த பதிவு யாருக்கு என்றால், தி.மு.க.வில் உள்ள என் செல்லகுட்டி ஆ. ராசாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இப்பதான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறார்கள். அவர்களை, எல்லாம் அசிங்கமாக திட்டாதீர்கள். எனக்கே, ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அவர்கள், ஒரு பெண் ஏன்? அவர்களை இப்படி திட்டுகிறீர்கள். அவர்கள், சாமி கும்பிட்டு விட்டு செல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.

உன் கட்சியில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு முதலில் அதனை போய் பார் அண்ணே. நல்லவேளை தமிழில் பேசியதால் ஸ்டாலின் அண்ணன் உன்னை விட்டு விட்டார். இதே பேச்சை வடநாட்டு பக்கம் நீ ஹிந்தியில் பேசியிருந்தால் விளக்குமாறு பிஞ்சி போயிருக்கும். உன்னை சோலியை முடித்து இருப்பார்கள் டி என கூறியுள்ளார்.


Share it if you like it