என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க… தி.மு.க. நிர்வாகியின் அட்ராசிட்டி..!

என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க… தி.மு.க. நிர்வாகியின் அட்ராசிட்டி..!

Share it if you like it

ரேஷன் கடையில் பணம் கேட்டு பணியில் இருந்த பெண் ஊழியரை தி.மு.க.வை சேர்ந்த கழக உடன் பிறப்பு மிரட்டிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, கழக கண்மணிகள் செய்த தரமான சம்பவங்களை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, தி.மு.க. நிர்வாகி ஒருவர் ஓசி பிரியாணி கேட்டு கடை ஊழியர்களிடம் குதித்து குதித்து பாக்ஸிங் செய்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். ஓசி பஜ்ஜீ, ஓசி தேங்காய் என்று சிறிய இடங்களில் தி.மு.க.வினர் தங்களது பராக்கிரமத்தை காட்டி வந்தனர்.

இதனிடையே, கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நமது ஆட்சி தான் நடைபெறுகிறது என்ற ஆவணத்தில் கழக கண்மணிகள் தள்ளு வண்டி கடை, பெட்டி கடை மற்றும் சிறு வியாபாரிகளிடம் தங்களது கைவரிசையை காட்ட துவங்கினர். இதனால், ஆளும் கட்சிக்கு பொதுமக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் குவிய துவங்கின.

இந்த நிலையில் தான், என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என பொதுகுழுவில் முதல்வர் ஸ்டாலின் கதறி இருந்தார். இந்த சம்பவமே கழக கண்மணிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.

இதனிடையே, கழக உடன் பிறப்பு ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று தனது சுயரூபத்தை காட்ட துவங்கி இருக்கிறார். அதாவது, தமக்கு மாமுல் வேண்டும் என பணியில் இருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இதுதவிர, அப்பெண்மணியை மிரட்டவும் செய்துள்ளார். இதனை, யாரோ ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அக்காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it