தி.மு.க.விலும் ஏக்நாத் ஷிண்டே:  அண்ணாமலை புது குண்டு!

தி.மு.க.விலும் ஏக்நாத் ஷிண்டே: அண்ணாமலை புது குண்டு!

Share it if you like it

தி.மு.க.விலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாக கூடும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியை நடத்தி வந்தது. ஆனால், தமிழகத்தில் எப்படியோ அதே போன்று அம்மாநிலத்திலும் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆடி இருக்கிறது. இதுதவிர, சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக இருந்து இருக்கிறது. அந்தவகையில், முதல்வருக்கும் சிவசேனாவை சேர்ந்த மூத்த அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக, அது பெரும் பகையாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனாவை விட்டு வெளியேறி இருக்கிறார். அந்தவகையில், பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து தற்பொழுது அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார். இதன்மூலம், மகாராஷ்டிராவில் குடும்ப ஆட்சி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

சிவசேனா போன்று தி.மு.க.விலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிக கவனமாக இருக்க வேண்டும் என பல அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், விடியல் அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் என்று மந்திரியாக பதவியேற்கிறாரோ அன்று அக்கட்சியில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாக வாய்ப்பு இருக்கிறது என ஆரூடம் கூறியிருக்கிறார்.

தி.மு.க.வின் ஏக்நாத் ஷிண்டே செந்தில் பாலாஜி, கனிமொழியா அல்லது ஜெகத்ரட்சகனா என பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில் தான், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it