ராகுகாலம் முடிந்த பின் பதவியேற்ற ‘சாரதா பிரியர்’!

ராகுகாலம் முடிந்த பின் பதவியேற்ற ‘சாரதா பிரியர்’!

Share it if you like it

ராகு காலம் முடிந்த பின் இ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர், அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டார். அதாவது, ராகு காலம் முடிந்த பின் இ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவி ஏற்றுக் கொண்டு இருக்கிறார். இவர், தான் ஈ.வெ.ரா.வின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it