பள்ளி குழந்தைகள் பட்டினி… ஃபுல்கட்டு கட்டிய தி.மு.க.வினர்!

பள்ளி குழந்தைகள் பட்டினி… ஃபுல்கட்டு கட்டிய தி.மு.க.வினர்!

Share it if you like it

அரசு நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்து விட்டு, அவர்களுக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வானகரத்தில், வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உணவு வழங்கும் இடத்திற்கு முண்டியடித்து சென்று உணவு அருந்தி இருக்கின்றனர். இதனால், பள்ளி குழந்தைகளுக்கு உணவு கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இவர்களில், ஒருவர் கூட பள்ளி மாணவ, மாணவியர்கள் பற்றி சிந்திக்கவில்லை என்பது தான் கொடுமை. இதையடுத்து, பசியில் வாடிய குழந்தைகள் வெறும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து சென்று இருக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியை தந்தி நியூஸ் வெளியிட்டு இருக்கிறது.


Share it if you like it