தி.மு.க. தொண்டர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி நகர்கின்றனர்? மணி அலறல்!

தி.மு.க. தொண்டர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி நகர்கின்றனர்? மணி அலறல்!

Share it if you like it

தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது என தி.மு.க. ஆதரவாளர் மணி அலறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அண்ணாமலை தலைவராக பதவியேற்கும் போது, மிக தெளிவாக கூறினார். 2024 – ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. இடையே மட்டுமே போட்டி இருக்கும் என கூறினார். மிக தெளிவாக அண்ணாமலை காய் நகர்த்துகிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அ.தி.மு.க. வாக்காளர்கள் ஒருபோதும் தி.மு.க.வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தி.மு.க.வின் மீது அவர்களுக்கு வெறுப்பு வரும் போதும், அ.தி.மு.க. அல்லாத வாக்காளர்களுக்கு கோவம் ஏற்படும் போது அவர்களின் தேர்வாக இருக்கும் கட்சி பா.ஜ.க.வாக தான் இருக்கும். குறிப்பிட்ட, ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி தான் நகர்கிறார்கள் என்பது உண்மை.

தி.மு.க.வின் மீது வெறுப்பு வளரும் போது, அ.தி.மு.க.விற்கு மக்கள் ஓட்டு போட்டார்கள். இன்றைக்கு, இரண்டு கட்சியையும் சாராதவர்கள், குறிப்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் தி.மு.க.வை நம்ம கட்சியால் வீழ்த்த முடியாது என்று அவர்கள் உணரும் போது பா.ஜ.க.வின் பக்கம் தான் அவர்கள் கவனம் திரும்பும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமாக இருப்பவர் துரைமுருகன். இவர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார் ;

நம்முடைய எதிரி நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவன் அது அ.தி.மு.க. அவனை சந்தித்தோம். பா.ஜ.க. இங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களிடம், பண பலம், அதிகார பலம் உள்ளது. அவர்களுக்கு, இணையாக நாம் சண்டை செய்ய வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் நம் பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். இந்த கமிட்டியை ஜாக்கிரதையாக கொண்டு வர வேண்டும் என அண்ணாமலையை மனதில் நினைத்து அமைச்சர் துரைமுருகன் கதறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it