நிதியமைச்சருக்கு குதித்து குதித்து  சாபமிட்ட அரசு ஊழியர்?

நிதியமைச்சருக்கு குதித்து குதித்து சாபமிட்ட அரசு ஊழியர்?

Share it if you like it

நிதியமைச்சருக்கு அரசு ஊழியர் ஒருவர் சாபமிடுவது போல காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பழைய ஓய்வூதியத் திட்டம் என பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க கடந்த சட்டமன்ற தேர்தலில் அள்ளி தெளித்து இருந்தன. ஆனால், ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடத்தை கடந்து விட்ட பின்பும் கூட தங்களது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இன்று வரை தி.மு.க அரசு திணறி வருகிறது. அந்தவகையில், பழைய ஓய்வூதிய முறைப்படி பென்ஷன் வழங்குவது சாத்தியமற்றது என சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார். தி.மு.க.வின் பென்ஷன் திட்ட வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்ட மக்கள் மத்தியில் அமைச்சரின் கருத்து பெரும் இடியாக இறங்கி இருந்தது.

இந்த நிலையில் தான், தங்களுக்கு பென்ஷன் கிடைக்காத விரக்தியில் அரசு ஊழியர்கள் சிலர் ஒன்று கூடி போராட்டம் நடத்தி இருக்கின்றனர். அதில், ஒருவர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு சாபம் விடுவது போன்று இக்காணொளியில் பேசி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it