தலைதூக்கும் தனிநாடு கோரிக்கை: என்.ஐ.ஏ.விடம் குவியும் புகார்!

தலைதூக்கும் தனிநாடு கோரிக்கை: என்.ஐ.ஏ.விடம் குவியும் புகார்!

Share it if you like it

விடியல் ஆட்சியில் தலைதூக்கும் தனிநாடு கோரிக்கை என்.ஐ.ஏ.விடம் குவியும் புகார்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், நாமக்கல் மாநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது;

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று பேசியிருக்கிறார். இவரின் கருத்திற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், ஆதன் ஊடக நெறியாளர் மாதேஷ். முகில் என்பவரை பேட்டி கண்டு இருக்கிறார். இவரின், பேச்சு முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்து இருக்கிறது. பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசிய முகிலனை கண்டிக்காமல், அவரை பேச விட்டு வேடிக்கை பார்த்த நெறியாளர் மாதேஷை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பிரிவினைவாதியின் வன்மம் நிறைந்த பேச்சை வெளியிட்ட ஆதன் ஊடகத்தின் மீதும் தி.மு.க எம்.பி. ஆ. ராசா மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.ஐ.ஏ.விடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it