பரதேசி… பரதேசி… பொன்முடியை விளாசிய சீமான்!

பரதேசி… பரதேசி… பொன்முடியை விளாசிய சீமான்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் பொன்முடியை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தி.மு.க.வை சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அமைச்சர் உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி நக்கலாக பேசி இருந்தார்.

அமைச்சர் பொன்முடியின் கருத்து, பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட பலர் அமைச்சரின் பேச்சிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓசி பஸ் என்று கூறிய அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இக்காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it