உயிருக்கு போராடிய நபர்: வேடிக்கை பார்த்த அமைச்சர்!

உயிருக்கு போராடிய நபர்: வேடிக்கை பார்த்த அமைச்சர்!

Share it if you like it

விபத்தில் அடிபட்டு கிடந்த நபரை தனது காரில் அழைத்து சென்று காப்பாற்றாமல் தி.மு.க. அமைச்சர் மதிவேந்தன் நடந்து கொண்ட விதம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். இவரது, கார் சென்று கொண்டு இருந்த போது, மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து தனது காரை நிறுத்தி இருக்கிறார். இதையடுத்து, அமைச்சர் அங்கு சென்று பார்த்த போது, ஒருவர் அடிபட்டு உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்த அமைச்சர் அவரின் உயிரை காப்பாற்றும் கடமையும், பொறுப்பும் அவருக்கு உண்டு. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆம்புலன்ஸ் வரும் வரை மக்களோடு மக்களாக நின்று அமைச்சர் வேடிக்கை பார்த்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், கொடுமை என்னவென்றால், அமைச்சர் மதிவேந்தன் எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it