சி.எஸ்.கே.வை தடை செய்ய வேண்டும்: பா.ம.க. எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

சி.எஸ்.கே.வை தடை செய்ய வேண்டும்: பா.ம.க. எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

Share it if you like it

சி.எஸ்.கே. அணியை தடை செய்ய வேண்டும் என சட்டசபையில் பா.ம.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், தர்மபுரி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் வெங்கடேஷன். இவர், விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் பேசும் போது இவ்வாறு கூறினார் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட இல்லை. ஆகவே, அதனை தடை செய்ய வேண்டும் என கூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பா.ம.க. எம்.எல்.ஏ. இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it