போலி டாக்டரின் ஜே ஜே கிளினிக்கை திறந்து வைத்த ஆ. ராசா?

போலி டாக்டரின் ஜே ஜே கிளினிக்கை திறந்து வைத்த ஆ. ராசா?

Share it if you like it

போலி மருத்துவரின் கிளினிக்கை தி.மு.க. மூத்த தலைவரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா திறந்து வைத்தாக சமூக வலைத்தளவாசி ஷிபின் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு இதோ ;

மேட்டுப்பாளையத்தில் போலி மருத்துவரின் கிளினிக்கை திறந்து வைத்த ஆ ராசா எம் பி. மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரமடை கணுவாபாளையம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஜே ஜே கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்த ஜெயஜோதி என்பவர் ,

போலி மருத்துவர் என விசாரணையில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார். மேற்படி மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் 22ந் தேதி , தி.மு.க.வின் துணை பொது செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆராசா MP அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும். .

போலி மருத்துவர் ஒருவரின் மருத்துவமனையை தொகுதி எம்.பி ஒருவரே நேரில் வந்து திறந்து வைத்த சம்பவம் நீலகிரி தொகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it