முதியவரிடம் வீரத்தை காட்டிய தி.மு.க. நிர்வாகி!

முதியவரிடம் வீரத்தை காட்டிய தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

தேர்தல் முன்விரோதம் காரணமாக, தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சிமன்ற செயலாளர் தினகரன் என்பவர் முதியவர் ஒருவரையும், அவரது தம்பியையும் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கட்ட பஞ்சாயத்து, அடிதடி, கொலை, கொள்ளை என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. எங்கும் வசூல், எதிலும் வசூல் என தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால், தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களின் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் துயர சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற செயலாளர் தினகரன் என்பவர், தேர்தல் முன்விரோதம் காரணமாக, முதியவர் ஒருவரையும் அவரது மகனையும் மிக கொடூரமான முறையில் தாக்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


Share it if you like it