அமைச்சரின் அரசு இல்லத்தில் ரெய்டு;   திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரச்சாரமா முதல்வரே?

அமைச்சரின் அரசு இல்லத்தில் ரெய்டு; திட்டமிட்டு செய்யப்படும் பொய் பிரச்சாரமா முதல்வரே?

Share it if you like it

அமைச்சரின் இல்லத்தில், அமலாக்கத்துறை ரெய்டினை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இது திட்டமிட்டு பரப்படும் பொய் பிரச்சாரமா? என நெட்டிசன்கள் முதல்வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ஆவின் பால் நிறுவனத்தில் சிறுவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற கேள்வியினை முன்வைத்தனர். அதற்கு, அது பொய்யான செய்தி, திட்டமிட்டு பரப்ப படுகிறது என கூறியிருந்தார். இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் ரூ. 10 கூடுதலாக வாங்கப்படுகிறது. இதுகுறித்த, செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளது. இதுபற்றி, உங்கள் கருத்து என்ன என்று முதல்வரிடம் கேட்டதற்கு மேற்கூறிய பதிலையே திரும்ப கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுவிலக்குதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்தான செய்திகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.


Share it if you like it