டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர்… பேருந்தில் கதகளி ஆடிய தி.மு.க.வினர்!

டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர்… பேருந்தில் கதகளி ஆடிய தி.மு.க.வினர்!

Share it if you like it

கழக கண்மணிகள் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை வெளுத்து வாங்கியிருக்கும் காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் இருக்கும். அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மயிலாடுதுறை சேத்தூர் கிராமத்தில் தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா, SRT தனியார் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க சொன்ன நடத்துனரை கொடூரமாக தாக்கி இருக்கிறார். இந்த காணொளிதான், தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதுகுறித்தான செய்தியினை பா.ஜ.க. மூத்த தலைவர் எஸ்.ஜி. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Share it if you like it