எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட காணொளிக்கு, ஆர்.எஸ். பாரதி அளித்திருக்கும் பதில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி இவ்வாறு கூறியிருக்கிறார் :
“செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான்” “பதவிக்காக ஒரு பேச்சும். பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல. “அ.தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்குகளை நிரூபித்து காட்டியுள்ளது தி.மு.க. அரசுதான் என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார். இவரின், இந்த கருத்தின் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை கை கழுவும் முடிவிற்கு தி.மு.க. வந்து விட்டது என்பதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.