கோபாலபுர குடும்பத்தை கொத்து பரோட்டா போட்ட பெண்மணி!

கோபாலபுர குடும்பத்தை கொத்து பரோட்டா போட்ட பெண்மணி!

Share it if you like it

தமிழகம் ஸ்டாலின் குடும்பத்திடம் சிக்கி சீரழிந்து வருவதாக பெண்மணி ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அள்ளி தெளித்தார். விடியல், கிடைக்கும் என நம்பி அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க.வை அரியணையில் அமர வைத்தனர். இந்த, ஆட்சி அமைந்து 15 மாதங்களை கடந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றபடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தை மூன்று முதல்வர்கள் ஆண்டு வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்து இருந்தார். அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் ஸ்டாலின். நிழல் முதல்வராக, உதயநிதி மற்றும் சபரீசன் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்து இருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்து அரசு துறைகளிலும் இவர்களது ஆதிக்கம் தலைவிரித்து ஆடி வருவதாக சமூக ஆர்வலர்கள் பல்வேறு இணையதள ஊடகங்களில் கதறி இருக்கும் காணொளிகளை இன்றும் நம்மால் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், கோபாலபுர குடும்பத்தை பெண்மணி ஒருவர் பொடி மாஸ் செய்து இருக்கிறார். அக்காணொளியில் அவர் கூறியதாவது ;

ஊருக்கு மட்டும் தான் தி.மு.க.வினர் உபதேசம் செய்வார்கள். இங்கு, ஆட்சி நடக்கவில்லை காட்சி தான் நடக்கிறது. சோசியல் மீடியாவில் தான் இங்கு ஆட்சி நடைபெறுகிறது. காலையில் இரண்டு போட்டோ ஷூட், மாலையில் இரண்டு போட்டோ ஷூட் நிகழ்வு. இந்த, புகைப்படங்கள் ட்விட்டர், பேஸ்புக், யூ டியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வரும். இன்று, பெரும்பாலான தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் எப்.எம் உள்ளிட்ட அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது. திரைத்துறையை கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை என ஒட்டு மொத்த கோபாலபுரத்தையே கதற விட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it