முஸ்லீம்கள் இறந்தாலும் ஸ்டாலினுக்கு ஆட்சிதான் முக்கியம் – ஷம்சுதீன் எச்சரிக்கை!

முஸ்லீம்கள் இறந்தாலும் ஸ்டாலினுக்கு ஆட்சிதான் முக்கியம் – ஷம்சுதீன் எச்சரிக்கை!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலினை நம்ப வேண்டாம் என இஸ்லாமிய மதகுரு பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இஸ்லாமிய மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி. இவர், திராவிட மாடல் ஆட்சி குறித்தும், தி.மு.க. குறித்தும் இவ்வாறு பேசியிருக்கிறார் ;

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டாலின் நல்ல முதல்வர் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். ஆட்சியா? பொதுமக்களா? என்று வந்து விட்டால், முஸ்லீம்களின் கழுத்தில் காலை வைத்து சாகடித்து விட்டு தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆட்சியாளர்களையும், எந்த அரசியல்வாதிகளையும் நம்பி எந்தவித பயனும் இல்லை. இவரது, தந்தை ஒரு வசனம் சொன்னார். சிறுபான்மையினருக்கு ஒரு கஷ்டம் என்றால், என் பிணத்தின் மீது நடந்து சென்று தான் அவர்களை தொட வேண்டும் என்று கூறினார். அவரது, ஆட்சியில் தான் முஸ்லீம்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். அனைத்து முஸ்லீம்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தனர். அவர்களை எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it