என்ன திமீர் இருக்கணும்… இந்த இடம் உங்க அப்பன் வீட்டு சொத்தா: சமூக ஆர்வலர் பாய்ச்சல்!

என்ன திமீர் இருக்கணும்… இந்த இடம் உங்க அப்பன் வீட்டு சொத்தா: சமூக ஆர்வலர் பாய்ச்சல்!

Share it if you like it

சென்னை அண்ணாசாலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து தி.மு.க. தனது கட்சியின் கொடி கம்பத்தை நட்டு இருப்பதற்கு சமூக ஆர்வலர் ஒருவர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது ;

ஓயிட்ஸ் ரோடு அண்ணா சாலை சிக்னல். மக்கள் நடை பாதையில் தி.மு.க.வின் கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த இடம், உங்க அப்பா வீட்டு சொத்தா, உங்களது கட்சியின் சொத்தா, உங்க பையன் சொத்தா, இந்த இடம் மக்களின் சொத்து. நீங்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். எந்தவித கூச்சமும் இல்லாமல் மக்களின் பொது சொத்தை ஆட்டையை போட உங்கள் கட்சி நினைக்கிறது. சென்னை மாநகராட்சியில் புகார் தெரிவித்துள்ளோம். இந்த ஏரியா உதவி பொறியாளர் என்ன? செய்கிறார். கமிஷனர் என்ன செய்கிறார்? மேயர் பிரியா என்ன? செய்கிறீர்கள். உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் பொது சொத்தை ஆக்கிரமிப்பு செய்ய தானா? எவ்வளவு அதிகார திமீர் இருந்தா, உங்கள் ஆட்சியில் இதுபோன்ற அபத்தத்தை செய்வீர்கள் என காட்டமாக பேசியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க்.


Share it if you like it