தேசிய மகளிர் ஆணையத்தில் மண்டியிட்ட தி.மு.க.வின் மிக மூத்த ஆபாச பேச்சாளர்!

தேசிய மகளிர் ஆணையத்தில் மண்டியிட்ட தி.மு.க.வின் மிக மூத்த ஆபாச பேச்சாளர்!

Share it if you like it

தி.மு.க.வின் பிரபல ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் தேசிய மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசினார்.

இப்பேச்சுதான் பா.ஜ.க. நிர்வாகிகள் மட்டுமல்லாது, நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பொதுவெளியில், பிரபலமான நடிகைகளை அவதூறாகப் பேசிய தி.மு.க. பேச்சாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தி இருந்தனர்.

தமிழகத்தில் நடப்பது விடியல் ஆட்சி என்பதால், சைதை சாதிக் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழக காவல்துறை எடுக்கவில்லை. இதையடுத்து, தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்து இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மிக மூத்த ஆபாச பேச்சாளரான சைதை சாதிக் தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி பகீரங்க மன்னிப்பு கேட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அதுகுறித்தான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, சைதை சாதிக் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. மகளிர் அமைப்புடன் இணைந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it