#மன்னார்குடி_மக்கு: மீண்டும் பொய் செய்தி பரப்பிய டி. ஆர்.பி. ராஜா!

#மன்னார்குடி_மக்கு: மீண்டும் பொய் செய்தி பரப்பிய டி. ஆர்.பி. ராஜா!

Share it if you like it

பொய் செய்தி பொன்னம்பலம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் தி.மு.க. எம்.எல்.ஏ. டி. ஆர்.பி.ராஜா. இவர், மீண்டும பொய் செய்தி ஒன்றை வெளியிட்டு இருப்பதை தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

தி.மு.க.வின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் டி.ஆர். பாலு. இவரது, மகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் டி.ஆர்.பி. ராஜா. இவர், அக்கட்சியின் ஐ.டி. விங் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். ராஜாவை பொறுத்தவரை அடாவடி பேர்வழி என்பது அனைவரின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. மன்னார்குடி தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வுபெற்றும் அமைச்சர் பதவி இவருக்கு கொடுக்கவில்லை. இவருக்கு, பின்னால் வந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சும்மாவே ட்விட்டரில் கம்பு சுற்றும் இவர், தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் பதவி கிடைத்ததும் சற்று அதிகமாகவே கம்பு சுற்றி வருகிறார். பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுவதில் இவருக்கு நிகர் இவரே. எனினும், இதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் கட்சியின் கொள்கைபடி பொய் மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி வருவதில் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். இவர், தனது தொகுதி மக்களுக்கு செலவிடும் நேரத்தைவிட ட்விட்டரில் செலவிடும் நேரம் அதிகம்.

இந்த நிலையில், பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பும் பா.ஜ.க. தமிழகத்தின் நேதாஜி அண்ணாமலை என அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்து இருக்கின்றனர். இந்த, சுவர் விளம்பரத்தை பார்த்த ஐ.டி. விங் செயலாளரான ராஜா கடுப்பாகி இருக்கிறார். இதையடுத்து, அந்த சுவர் விளம்பரத்தை போட்டோஷாப் செய்து தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய பா.ஜ.க. ஐ.டி.விங் மற்றும் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் டி.ஆர்.பி. ராஜாவை #மன்னார்குடி-மக்கு என ட்விட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Image

Share it if you like it