ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… அமைச்சர் தந்த  அட்வைஸ்!

ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்… அமைச்சர் தந்த அட்வைஸ்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எப்படி? கூட்டத்தை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தா. மோ. அன்பரசன் கட்சிகாரர்களுக்கு கொடுத்த ஆலோசனையின் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தா.மோ. அன்பரசன். இவர், அக்கட்சியின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர், மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு உரிய பதிலை அளிப்பதில்லை. அதற்கு, மாறாக அவர்களை வசைப்பாடுவதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் அன்பரசன் மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பா.ஜ.க.வின் சார்பில் இருந்து தரமான பதிலடி அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து இருக்கின்றனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்குமாறு அவரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று கூற அமைச்சர் பொதுமக்களிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படியாக, அமைச்சரின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பம்மலில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் பலர் கலந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், அவர்கள் அனைவரும் நம்ம கட்சியை சார்ந்தவர்கள் என்பது தெரிய கூடாது. அப்படியொரு கூட்டத்தை சேர்க்க வேண்டும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it