அமைச்சரை அசிங்க அசிங்கமாக வசைபாடிய தி.மு.க நிர்வாகி!

அமைச்சரை அசிங்க அசிங்கமாக வசைபாடிய தி.மு.க நிர்வாகி!

Share it if you like it

தி.மு.க ஒன்றிய செயலாளர் அமைச்சரை திட்டிய ஆடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பத்மநாபமங்களத்தை சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன். இவர், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இதையடுத்து, அவரை கருங்குளம் ஒன்றிய செயலாளராக்கி அழகு பார்த்தவர் அமைச்சர். நல்ல முறையில் இருவருக்கும் சுமூகமான உறவு இருந்து வந்தது. அந்தவகையில், பத்மநாபமங்களத்தில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான கல் குவாரியை இயக்க அவ்வூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனது கிராம மக்களுக்கு ஆதரவாக வைகுண்ட பாண்டியன் களம் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன்காரணமாக, இருவருக்குமான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. .

இதற்கிடையில், ஊரக ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், தனது செல்வாக்கை பயன்படுத்தி பத்மநாபமங்களத்தில் ஊராட்சி மன்ற தலைவராக வைகுண்ட பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரின், வெற்றி அமைச்சருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அமைச்சரின் கல் குவாரியை சுமூகமாக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வைகுண்ட பாண்டியனுக்கு போன் போட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து, அவரும் பதிலுக்கு எகிறியுள்ளார். இதையடுத்து, அமைச்சர் கொடுத்த புகார் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் வைகுண்ட பாண்டியனை கைது செய்து தற்பொழுது சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் தான், அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் மற்றும் வைகுண்ட பாண்டியன் பேசிய ஆடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it