’முருகர் உங்கள வச்சு செய்வாரு..!’ தி.மு.க.விற்கு சாபமிட்ட பக்தர்!

’முருகர் உங்கள வச்சு செய்வாரு..!’ தி.மு.க.விற்கு சாபமிட்ட பக்தர்!

Share it if you like it

தி.மு.க அரசிற்கு பக்தர் ஒருவர் சாபமிட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க கடந்து வந்த பாதையை பின்னோக்கி பார்த்தால் திருட்டு, உருட்டு, இருட்டை தவிர வேறொன்றுமில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு, குடும்ப ஆதிக்கம், லஞ்சம், ஊழல், தலைவிரித்து ஆடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை, தொடர்ந்தால் இலங்கை என்ன கதியில் உள்ளதோ? அதே நிலைக்கு தமிழகம் சென்று விடும் என்பது பல அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அந்த வகையில், இந்த அரசு பலதரப்பு மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. குறிப்பாக, ஆளும் தி.மு.க அரசு ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காரியங்களில் அதிக கவனம் செலுத்துகிறதோ? என்னும் ஐயம் ஹிந்துக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஹிந்துக்களுக்கு எதிராக விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் 200 கோயில்களுக்கும் மேல் இடிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஹிந்துக்களின் வழிப்பாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் பண்டிகைகள் தொடர்ந்து கேலி கிண்டல் செய்யப்படுவதும். அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தி.மு.க ஆதரவு பெற்ற யூடியூப் இணையதளமான யூ2 புரோட்டஸ் தில்லை நடராஜர் குறித்து அண்மையில் அவதூறு பரப்பி இருந்தது. இதற்கு, தமிழகம் முழுவதிலுமிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்தன. மேலும், காவல்துறையில் புகார் தெரவிக்கப்படன. தி.மு.க.வின் ஆசி பெற்ற நபர் என்பதால் காவல்துறை அவன் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படியாக, தமிழகத்தில் விடியல் அரசின் அவலங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் கோவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை முருக பக்தர் வேதனையுடன் கூறியதாவது; பழைய நடைமுறைகளை மீண்டும் கோவில் கொண்டு வரவேண்டும் எனவும் பக்தர்கள் அனுபவிக்கும் மனஉளைச்சல் குறித்து இக்காணொளியில் தெரிவித்துள்ளார். இதேநிலை, தொடர்ந்தால் முருகர் உங்களை வச்சு செய்வாரு, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் உங்களுக்கு விளையாட்டாக மாறி விடும் திருப்பி 15 வருடத்திற்கு உங்களால் எழுந்திருக்கவே முடியாது என சாபமிடும் வகையில் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it