மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய சட்டசபையை தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், உதயநிதியின் தலைமை ரசிகர் மன்றமாக மாற்றி விட்டதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் இந்தியாவிலேயே கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்திய பெருமை, நம் முதல்வர் ஸ்டாலினைத் தான் சேரும் என்று கருத்து தெரிவித்து இருப்பதற்கு வழக்கம் போல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.