பிரச்சாரம் செய்ய கூட லாயக்கில்லாத திமுக – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

பிரச்சாரம் செய்ய கூட லாயக்கில்லாத திமுக – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Share it if you like it

மக்களவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திமுகவும் தன் பங்குக்கு பிரச்சாரம் என்ற பெயரில் காமெடி செய்து வருகின்றனர். மேலும் திமுக நிர்வாகிகள் செல்லும் இடத்தில் எல்லாம் மக்களே கேள்வி கேட்டு துரத்தி விடும் சம்பவமும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக எம்பி ஆற்காடு வீராசாமி வட சென்னையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மேயர் பிரியாவும் உடன் இருந்தார். பிரச்சாரத்தில் மக்களிடத்தில் பேசும்போது ஆற்காடு வீராசாமி உடன் இருந்த திமுக நிர்வாகி சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது :- மோடி மீண்டும் பிரதமரானால் ஆட்டு கறி, மாட்டு கறி, கோழி கறி என எதுவும் நம்மால் சாப்பிட முடியாது. அதற்கு பதிலாக சாம்பார் சாதம், தயிர் சாதம்,புளி சாதம் தான் சாப்பிட முடியும் என்று பேசியுள்ளார்.

பிரச்சாரம் என்றால் இதற்கு முன் அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு சேகரிக்கலாம். இல்லை என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு சேகரிக்கலாம். ஆனால் திமுகவினருக்கோ அவர்கள் சாதனை என்று எதுவும் செய்யவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். பிரச்சாரம் செய்ய கூட திமுகவினருக்கு தெரியவில்லை. இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலை என்ன ஆகுமோ ? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

https://x.com/HLKodo/status/1774793891352334654?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *