பா.ஜ.க.வினருக்கு கொலை மிரட்டல்: ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தல்!

பா.ஜ.க.வினருக்கு கொலை மிரட்டல்: ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வலியுறுத்தல்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சி மீது கைவைக்க நினைத்தால் பா.ஜ.க.வினர் யாரும் உயிரோடு இருக்க முடியாது என்று பேசிய அக்கட்சியைச் சேர்ந்த ஆபாச பேச்சாளர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி இருக்கிறது.

தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.பாரதி. ஆபாசமாகவும், திமிராகவும், மிரட்டல் விடுத்தும் பேசுவதில் வல்லவர். சமீபத்தில் கவர்னரை உயிரோடு போக முடியாது என்று சொன்னவர். தற்போது, பா.ஜ.க.வினர் உயிரோடு இருக்க முடியாது என்று பேசியிருக்கிறார். அதாவது, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க.வை மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். தமிழக அரசியலை பா.ஜ.க. வேறு விதமாக நடத்தப் பார்க்கிறது. தி.மு.க. ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். அப்படி தி.மு.க. ஆட்சி மீது கைவைத்தால், பா.ஜ.க.வினர் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் ஆர்.எஸ்.பாரதி பேசினார் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்…


Share it if you like it