பெண்ணடிமைத்தனம் மறைய வேண்டும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

பெண்ணடிமைத்தனம் மறைய வேண்டும் தி.மு.க தலைவர் ஸ்டாலின்..!

Share it if you like it

தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில். அப்பாவி பெண்களுக்கு அநீதி இழைக்கும் கட்சியாக திமுக உள்ளது என்று நெட்டிசன்கள் இன்று வரை கருத்து தெரிவித்து வருகின்றனர்.. கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்னும் மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.

நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது என்று தி.மு.க மூத்த தலைவர் திருமதி. கனிமொழி கூறியதன் மூலம். பெண்களை தி.மு.க பாதுகாக்கும் லட்சணம் இது தான் என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக புரிந்து கொள்ள முடியும்…

அண்மையில் திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளும் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாகவும், கடும் மன அழுத்தம் காரணமாகவும்.. அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது..

அதே சமயத்தில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ 15 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரத்தை கண்டிக்காமல் மெளனம் காத்தார் தி.மு.க எம்.பி  கனிமொழி என்பது நிதர்சனமான உண்மை..  தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள், என தி.மு.கவினர் செய்யும் சேட்டைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில்..

ஈ.வெ.ரா-வின் 47-வது நினைவு தினத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்..

சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு நாள்!

சமூக அடிமைத்தனம் – ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை – பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!

என்று ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு நெட்டிசன்கள் உள்பட பலரும் தங்களின் கருத்தினை முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it