பட்டியலின அமைச்சரை “நீ  அமைச்சராக இருக்க தகுதியற்றவன்” என்று தரக்குறைவாக பேசிய திமுக அமைச்சர் டி.ஆர் பாலு !

பட்டியலின அமைச்சரை “நீ அமைச்சராக இருக்க தகுதியற்றவன்” என்று தரக்குறைவாக பேசிய திமுக அமைச்சர் டி.ஆர் பாலு !

Share it if you like it

‘மிக்ஜாம்’ புயலை அடுத்து தமிழகத்துக்கு நிதி வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த காரசாரமான விவாதத்தின் போது, ​​அமைச்சர் எல்.முருகனை டி.ஆர்.பாலு கடுமையாக சாடினார்.

திமுக அமைச்சர் டி.ஆர் பாலு தலித் MP எல்.முருகன் அவர்களை தலையிடாதே…நீ ஒரு தகுதியற்றவன் உனக்கு அமைச்சாரக இருக்கவே தகுதி இல்லை என்று மிக தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் டி.ஆர் பாலு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “அவரை எப்படி தகுதியற்றவர் என்று கூற முடியும்? திமுக அரசு தகுதியற்றது! காங்கிரஸ் தகுதியற்றது ! தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர் பாலு கூறியது ஒட்டுமொத்த எஸ்சி சமூகத்தையும் அவமதித்துள்ளார் என்று பேசினார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

திரு டி.ஆர்.பாலு அரசியலுக்கு அவமானம். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி அவர் இழிவான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல. மாண்புமிகு அமைச்சர் திரு.எல்.முருகன் மீதான இந்தக் கருத்துகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்

ஜனநாயகக் கோவிலில். நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி சமூக நீதியின் உண்மையான நாயகன் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக்கியுள்ளார், பல தசாப்தங்களாக மத்திய அரசில் இருந்தும் திமுகவால் ஒருபோதும் இதுபோல் செய்ய முடியாது.

மாண்புமிகு அமைச்சர் திரு.எல் முருகன் அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மாநில அமைச்சராக ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் நிச்சயமாக திமுக எம்பிக்களை எரிச்சலடைய செய்துள்ளது.

திரு டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, SC சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும்.

https://x.com/annamalai_k/status/1754771685809725773?s=20


Share it if you like it