தேர்தல் தேதியை மறந்த அமைச்சர்கள்… பத்திரிகையாளர்கள் முன்பு திருதிரு!

தேர்தல் தேதியை மறந்த அமைச்சர்கள்… பத்திரிகையாளர்கள் முன்பு திருதிரு!

Share it if you like it

தேர்தல் தேதியை மறந்து விட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குழம்பி நின்ற அமைச்சர்களின் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது, மகன் திருமகன் ஈவேரா. அண்மையில் இவர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து, அவர் வகித்து வந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வண்ணம் தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள் ஈரோட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கின்றனர். அப்போது, தேர்தல் தேதியை மறந்து அமைச்சர்கள் திருதிருவென விழித்த சம்பவம் பத்திரிகையாளர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it