ஹிந்துக்களின் புனித துறவியை அவமதித்த திமுக எம்பி தொடரும் ஹிந்து விரோத செயல்..!

ஹிந்துக்களின் புனித துறவியை அவமதித்த திமுக எம்பி தொடரும் ஹிந்து விரோத செயல்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சி பொறுப்புக்க வந்த பின்பு தமிழக கோவில்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வது ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் முருகன் கோவிலுக்கு ஏற்பட்ட நிலை குறித்து அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்.
விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.
  • முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி. கோடிக்கணக்கான ஹிந்துக்களின், உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக பேசிய சுரேந்திரனுக்கு அதிக முக்கியத்துவத்தை இன்று வரை சன் ஊடகம் வழங்குவது.
  • ஈஷா யோகா மையத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் கருத்து தெரிவித்தது. என தி.மு.க மெல்ல, மெல்ல, ஹிந்து விரோத நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்கள் அண்மையில் ஸ்ரீநகர் சென்று உள்ளார். அங்குள்ள சங்கராச்சாரியார் கோவில் முன்பு எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

கோடிக்கணக்கான ஹிந்து மக்களின் புனித துறவியை அவமதிக்கும் நோக்கில் தி.மு.க எம்.பி நடந்த கொண்ட சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் எவ்வழியோ, தி.மு.க எம்.பியும் அவ்வழியே என்பது போல ஹிந்துக்களை தி.மு.க தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்து புனித துறவியை அவமதித்த தி.மு.க எம்.பி..!

 


Share it if you like it