உங்க எம்.பி.யை பார்க்க வேண்டுமா?: ஒரு சூடம் போதும்… அண்ணாமலை கொடுத்த டிப்ஸ்!

உங்க எம்.பி.யை பார்க்க வேண்டுமா?: ஒரு சூடம் போதும்… அண்ணாமலை கொடுத்த டிப்ஸ்!

Share it if you like it

சூடம் கொளுத்தி பூமி பூஜை செய்தால் போதும் தி.மு.க. எம்.பி.யை உடனே பார்த்து விடலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டிப்ஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தர்மபுரி எம்.பியாக இருப்பவர் டாக்டர் செந்தில். இவர், கிரிப்டோ கிறிஸ்தவர் என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், தர்மபுரியில் ஒரு ஏரியை சீரமைப்பதற்கான விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவுக்கு தர்மபுரி எம்.பி. என்கிற முறையில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. செந்தில்குமாரை அழைத்திருக்கிறார்கள்.

அவரும் வந்தார். அப்போது, வழக்கமாக அரசு விழாக்களில் செய்யப்படுவதுபோல, அந்த விழாவிலும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. ஆனால் செந்தில்குமாரோ, வந்தோமா விழாவை சிறப்பித்தோமா என்றில்லாமல், பொங்கி எழுந்து விட்டார். எப்படி ஹிந்து மதப்படி மட்டும் பூஜை செய்யலாம்? கிறிஸ்தவ பாதிரியாரை கூப்பிடுங்கள். இஸ்லாமிய இமாமை கூப்பிடுங்கள் என்று கத்திய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இதனிடையே, ஹிந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அமைச்சர் எப்படி? வாழ்த்து தெரிவிக்கலாம் என எம்.பி. செந்தில் ஆவேசமாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், தர்மபுரி மாவட்டத்தில் பா.ஜ.க.வின் சார்பில் பொதுக்கூட்டம் நேற்றை தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசும் போது இவ்வாறு கூறினார் ;

இங்க ஒரு எம்.பி. இருக்கிறார். அவரை, நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால், ஒரு சூடம் கொளுத்தி பூமி பூஜை வைத்தால் போதும் அவர் உடனே கிளம்பி வந்து விடுவார் என கிண்டலாக அண்ணாமலை பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it