பணபலம், அதிகார பலம், மது, பிரியாணி கொடுத்து ஜனநாயக படுகொலை செய்து தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக பொதுமக்கள் உட்பட அரசியல் நோக்கர்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் நான்காவது வார்டு தி.மு.க வேட்பாளர் வெறும் ஒரு ஓட்டு வாங்கிய சம்பவம் ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாது 60 வார்டுகளில் தி.மு.க-வினர் வைப்பு தொகையை இழந்து விட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.