தி.மு.க. எம்.பி.க்கே இந்த கதியா?

தி.மு.க. எம்.பி.க்கே இந்த கதியா?

Share it if you like it

திருச்சி சிவா எம்.பி.யின் வீடு மற்றும் கார் மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமாக இருப்பவர் திருச்சி சிவா. இவரின், வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த திடலை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவிற்கான கல்வெட்டில் எம்.பி. சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் நேருவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும், தங்களது கடும் எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. எம்பி திருச்சி சிவாவின் வீட்டில் இன்று காலையில் சிலர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் திருச்சி சிவா வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன.

இதனிடையே, அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கும் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களுக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
 


Share it if you like it