செல்வன் – இளமதிக்கு குரல் கொடுத்த தி.மு.க எம்.பி அமைச்சர் சேகர் பாபுவின் மகளுக்கு குரல் கொடுக்காதது ஏன்?

செல்வன் – இளமதிக்கு குரல் கொடுத்த தி.மு.க எம்.பி அமைச்சர் சேகர் பாபுவின் மகளுக்கு குரல் கொடுக்காதது ஏன்?

Share it if you like it

2 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த காதல் ஜோடி! ஈரோட்டில் காதல் திருமணம் செய்த செல்வன் – இளமதி தம்பதி 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்தனர். இளமதியை அவரது பெற்றோர் ஆணவக்கொலை செய்ய இருப்பதாக செல்வன் புகார் அளித்த நிலையில், போலீசார் களமிறங்கி 2 ஆண்டுகளுக்கு பிறகு தம்பதியை சேர்த்து வைத்தாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியை அறிந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் அவர்கள் நாடாளுமன்றத்தில் இதற்கு குரல் கொடுத்தாக இணையதளவாசி ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார். இதற்கு செந்தில் அவர்கள் வணக்கம் தெரிவிக்கும் விதமாக பதிவு செய்து உள்ளார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மகளின் காதலன் தனது குடும்பத்திற்கும், தனக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது எனது குடும்பத்திற்கு ஏதேனும் ஒன்று ஆனால் அதற்கு அமைச்சரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். செல்வன் – இளமதிக்கு குரல் கொடுத்த செந்தில் அவர்கள் அமைச்சர் மகளின் காதலை எப்பொழுது சேர்த்து வைப்பார் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்ட காதலன் சமூக நீதி பேசும் காவலர்கள் எங்கே?
அமைச்சருக்கு எதிராக இன்று வரை குரல் கொடுக்காத தமிழக போராளிகள்..


Share it if you like it

One thought on “செல்வன் – இளமதிக்கு குரல் கொடுத்த தி.மு.க எம்.பி அமைச்சர் சேகர் பாபுவின் மகளுக்கு குரல் கொடுக்காதது ஏன்?

Comments are closed.