கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் தி.மு.க அரசு மீது கடும் குற்றச்சாட்டு.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கோவை மாவட்டத்தில், படுதோல்வியடைந்ததை அடுத்து. ஸ்டாலின் தலைமையிலான அரசு அம்மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் உட்பட எதனையும், முறையாக செய்து தராமல் தொடர்ந்து புறக்கணிக்கும், செயலில் இன்று வரை விடியல் அரசு ஈடுபட்டு வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசிகள், அடிப்படைவசதிகள், போன்றவற்றை கோவை மக்கள் போராடி தங்கள் உரிமைகளை பெற வேண்டிய அவலநிலை அங்கு நிலவி வரும் இச்சூழலில், கோவை தெற்கு சட்டமன்ற பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் தனது ஆதங்கத்தையும், தி.மு.க அரசின் தவறுகளையும், சுட்டிக்காட்டி பேசியுள்ள காணொளி த்றபொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.