தி.மு.க வார்டு செயலாளர் தலைமையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கும்பல்..!

தி.மு.க வார்டு செயலாளர் தலைமையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கும்பல்..!

Share it if you like it

தமிழகத்தில் தலை தூக்கும் லாட்டரி சீட்டு கலாச்சாரம்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பல குடும்பங்கள் படுகுழியில் இருந்து வரும் சமயத்தில், மேலும் ஏழை, எளியவர்கள், அப்பாவி மாணவர்கள் கெட்டு சீரழியும் விதமாக லாட்டரி சீட்டு விற்பனை மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்து இருப்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, என ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தி.மு.க வார்டு செயலாளர் மனோகர் தலைமையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் அடங்கிய கும்பலை காவல்துறை கைது செய்து விசாரணை செய்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. விடியல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் சகஜம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it