இது தான் உங்க திராவிட ’மாடல்’ ஆட்சியா?… பா.ஜ.க தலைவரின் தாயை திட்டிய மூன்றாம் தர பேச்சாளர்!

இது தான் உங்க திராவிட ’மாடல்’ ஆட்சியா?… பா.ஜ.க தலைவரின் தாயை திட்டிய மூன்றாம் தர பேச்சாளர்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவரின் தாயை திட்டிய தி.மு.க ஆபாச பேச்சாளருக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் பொதுமக்களையும் கடந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், தமிழகத்தின் எதிர்க்கட்சி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க என்று மக்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு மிக தீவிரமாக அரசியலில் தி.மு.க.வை எதிர்த்து களப்பணியாற்றி வருகிறார்.

விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்கள், அடாவடிகள், கட்டபஞ்சாயத்து மற்றும் ஊழல் உள்ளிட்டவற்றை உடனுக்கு உடன் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறார். இதன் காரணமாக, தி.மு.க.வின் தில்லு முல்லு சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க தனது கட்சியில் உள்ள ஆபாச பேச்சாளர்களை, பா.ஜ.க.விற்கு எதிராக பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. சமீபத்தில், பா.ஜ.க மூத்த தலைவரும் தற்பொழுது புதுவை மற்றும் தெலுங்கான என இரு மாநிலங்களில் ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் அவள் என்று ஒருமையில் பேசி இருந்தார்.

அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அசுர வளர்ச்சியை கண்டு அரண்டு போன விடியல் அரசு. பா.ஜ.க வைக்கும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல். வழக்கம் போல தனது மூன்றாம் தர பேச்சாளர்களை பேச விட்டு ரசித்து வருகிறது. இதுதான், நீங்கள் சொன்ன திராவிட மாடல் ஆட்சியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சியை அண்ணாமலை தான் முடித்து வைப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Image

Share it if you like it