ஈயம் பூசுன கொலுசு… உ.பிஸ்களின் தில்லாலங்கடி! குட்டை உடைத்த அண்ணாமலை!

ஈயம் பூசுன கொலுசு… உ.பிஸ்களின் தில்லாலங்கடி! குட்டை உடைத்த அண்ணாமலை!

Share it if you like it

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க.வினர் கோவை மாவட்டத்தில் ஈயம் பூசிய கொலுசுகளை பொதுமக்களுக்கு வழங்கி இருப்பதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்பு, கொலை, கொள்ளை என சட்டம், ஒழுங்கு சந்தி சிரித்து வருவதை அனைத்துத் தரப்பு மக்களும் வேதனையுடன் கவனித்து வருகின்றனர். இந்த விடியல் ஆட்சியில் மக்கள் கடும் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பள்ளி மாணவிகளை தொடர்ந்து, பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்பதை பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக வரும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே வடியாத மழை வெள்ளம், வடிந்து ஓடும் பொங்கல் வெல்லம் என ஊழல் புகார்கள் ஆளும் கட்சி மீது குவிந்து வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு நிச்சயம் தோல்வியை பரிசாக வழங்க வேண்டும் என மக்கள் உறுதி பூண்டுள்ளனர். இந்த நிலையில், அப்பாவி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை கவரும் வண்ணம், கோவை மாவட்டத்தில் ஈயம் பூசிய கொலுசுகளை தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு வழங்கி இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். அது குறித்த லிங்க் இதோ…


Share it if you like it