யாரோ எழுதி கொடுத்ததை படித்தால் இதுதான் நடக்கும் – பா.ஜ.க தலைவர் காட்டம்!

யாரோ எழுதி கொடுத்ததை படித்தால் இதுதான் நடக்கும் – பா.ஜ.க தலைவர் காட்டம்!

Share it if you like it

எந்த சரித்திரமும் தெரியாமல் எதுவும் புரியாமல் யாரோ எழுதி கொடுத்ததை தமிழக முதல்வர் பேசி வருவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு எங்களால் மட்டுமே விடியல் கிடைக்கும் என்பது போல தேர்தல் சமயத்தில் தி.மு.க தலைவர் பல வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு தற்பொழுது வரை என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஓசி டீ, ஓசி தேங்காய், கடப்பா கல் என்று இருந்தவர்கள். ஆட்சிக்கு வந்த பின்பு மாமூல், கட்டப்பஞ்சாயத்து, பிரியாணி கடை, சூப்பர் மார்கெட் என்று அரசு வளர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு, பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளே சாட்சி. இவ்வாறு, தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான “ஊழல் அரசை தூக்கியெறி வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதுதவிர, நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு அமைச்சர்கள் செய்யும் ஊழல்களை பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் ஆதாரத்தோடு மக்கள் மன்றத்தில் முன்வைத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க மகன், மருமகன், மருமகள் என ஒரு பட்டாளமே ஆட்சி அதிகாரத்தை சுவைத்து கொண்டு இருக்கின்றது என்பதே பலரின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; எந்த சரித்திரமும் தெரியாமல் எதுவும் புரியாமல் யாரோ எழுதி கொடுத்ததை முதல்வர் பேசி வருகிறார். இதன்காரணமாக, தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் தொடர்ந்து தலைகுனிவை முதல்வர் ஏற்படுத்தி வருகிறார். இதை பார்த்து, அனைத்து மாநிலங்களும் சிரிக்கின்றன. வெறும் அரசியல் லாபத்திற்காக இதுபோன்று பேசி வருகிறார் என்று காட்டமாக பேசியுள்ளார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it