பிரபல திரைப்பட இயக்குனர் மிஷ்கின் தி.மு.க அரசிற்கு பாராட்டு.
தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் நன்கு அறிவர். பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி தற்கொலை, சென்னையை அடுத்து உள்ள மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை, கல்லூரி மாணவன் மணிகண்டனின் மர்ம மரணம், பள்ளி சிறுமி எரித்து கொலை, என தமிழக மக்கள் அச்சத்துடனும், பயத்துடனும், வாழும் அவல நிலை தற்பொழுது தமிழகத்தில் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் முகமூடி, யுத்தம் செய், அஞ்சாதே, பிசாசு, திரைப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் சமீபத்தில் விகடன் ஊடகத்திற்கு பேட்டியளிக்கும் பொழுது தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. தமிழக மக்கள் அமைதியுடன் வாழ்கின்றனர் என அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.