தொடரும் ஹிந்து விரோத போக்கு – உறங்கும் ஹிந்துக்கள்..!

தொடரும் ஹிந்து விரோத போக்கு – உறங்கும் ஹிந்துக்கள்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கோவில்கள் இடிப்பு.

தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, ஹிந்து ஆலயங்களை குறிவைத்து, இடிக்கும் சம்பவங்கள், அதிகரித்த வண்ணம் உள்ளது. கோயம்புத்தூர் பாரதி நகரில், பகவான் கிருஷ்ணர் சிலை ஒன்று, சமீபத்தில் உடைக்கப்பட்டுள்ள சம்பவம். பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், ஹிந்துக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு, மாவட்டம் தாம்பரம் பகுதியில், ராமர் கோவில் ஒன்று இடிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கோவில்களை இடித்து, ஹிந்து மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து, மதமாற்றும் சக்திகளுக்கு ஆளும் தி.மு.க அரசு துணை போகிறது. என்று பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுபான்மை மக்களின், உணர்வுகளை காயப்படுத்தி, விட கூடாது என்பதற்காக, கிறிஸ்மஸ், பக்ரீத், போன்றவற்றிற்கு, லாக் டவுன் குறித்து பேசாமல் மெளனமாக இருந்து விட்டு, பொங்கல் பண்டிகையில் இருந்து 4 நாட்கள், தமிழக அரசு லாக் டவுன் போட்டு இருப்பதன் மூலம், இந்த அரசு ஹிந்துக்களை எந்த அளவிற்கு, வெறுக்க துவங்கியுள்ளது என்பது மக்களின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், கொண்டாடும் பொழுது பரவாத கொரோனா. ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகையில் மட்டும் பரவ துவங்கி விடுமா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Share it if you like it