தமிழக மக்களை ஏமாற்றிய தி.மு.க-விற்கே மொட்டை அடிக்க முயன்ற உண்மையை மட்டுமே பேசும் சீமான்..!

தமிழக மக்களை ஏமாற்றிய தி.மு.க-விற்கே மொட்டை அடிக்க முயன்ற உண்மையை மட்டுமே பேசும் சீமான்..!

Share it if you like it

தமிழக மக்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், ஒன்றிய அரசு, ஜெய்ஹிந்த், என்று ஏதேனும் ஒரு சர்ச்சையை கிளப்பி மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் மத்திய அரசுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் விடியல் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், வெறுப்பையும், ஏற்படுத்தி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய தி.மு.கவின் மீது கடும் கோவத்தில் தமிழக மக்கள் இருக்கும் இந்நிலையில். தன்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கசாவடிகளையும் ஜேசிபி கொண்டு அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கினணப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விடியல் தருகிறோம் என்று தமிழக மக்களை ஏமாற்றிய தி.மு.க மீது பலர் கடும் கோவத்தில் இருக்கும் நிலையில். தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வரும் சீமான் தன்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கசாவடிகளையும் ஜேசிபி கொண்டு அகற்றி விடுவேன் என்று பொய்யை பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க-விற்கே மொட்டை அடிக்க சீமான் முயல்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it