பொய் செய்தி பரப்பிய தி.மு.க. நிர்வாகி… பா.ஜ.க. எதிர்ப்பால் பதிவை நீக்கி விட்டு எஸ்கேப்!

பொய் செய்தி பரப்பிய தி.மு.க. நிர்வாகி… பா.ஜ.க. எதிர்ப்பால் பதிவை நீக்கி விட்டு எஸ்கேப்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பற்றி, தி.மு.க. நிர்வாகி பொய்ச் செய்தி பரப்பிய நிலையில், கடும் எதிர்ப்பால் பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சுவலிப்பதாகக் கூறவே, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, அவரை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் காவலில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வருகிற 21-ம் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பிரபல வாரம் இருமுறை இதழ் ஒன்று, “டெல்லி… ஆளுநர்… அமலாக்கத்துறை… மும்முனைத் தாக்குதலில் தி.மு.க.” என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த செய்தியை திரித்து “லுலு… அண்ணாமலை… பா.ஜ.க… கோவை லுலு… அண்ணாமலை லாலி…” என்கிற தலைப்பில் செய்தி வந்திருப்பதாகக் கூறி, தி.மு.க. மாணவர் அணித் தலைவர் ராஜிவ் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பொய் செய்தியை பதிவிட்டிருந்தார்.

அப்பதிவில், “முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையே, லுலு முதலாளிக்கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க? 65 லட்சம் கமிஷன்னு சொல்லுறாங்க. லுலு முதலாளி பாய்ன்னு சொன்னாங்க. ஓ… நாய் வித்த காசு குரைக்கவா போகுது? பாய் காது கசக்கவா போகுது!” எந்று பதிவிட்டிருந்ததோடு, அமலாக்கத்துறையை டேக் செய்து, இதுவும் சட்டவிரோத பண மோசடியில்தான் வரும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, ராஜிவ் காந்தி தான் போட்ட பதிவை நீக்கிவிட்டு எஸ்கேப்பாகி விட்டார்.

இதைத் தொடர்ந்து, தி.மு.க. நிர்வாகி ராஜிவ் காந்தியை பா.ஜ.க. வறுத்தெடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “போட்ட பதிவை நீக்கி இருப்பதுதான் கருணாநிதித்தனம். உனக்கெல்லாம் வெட்கமா இல்லையா? பொழுது சாய்ந்தா போதும் பொய் பரப்பும் கொத்தடிமை. மரியாதையா எங்க தலைவர் கிட்ட மன்னிப்புக் கேளு” என்று பதிவிட்டிருக்கிறார்.


Share it if you like it