திருஞானசம்பந்தரை இழிவுப்படுத்திய அமைச்சர் துரைமுருகன்!

திருஞானசம்பந்தரை இழிவுப்படுத்திய அமைச்சர் துரைமுருகன்!

Share it if you like it

தெய்வ குழந்தையான திருஞான சம்பந்தரை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இழிவுப்படுத்தி பேசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துக்களின் கலாச்சராம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர்கள். குறிப்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இஸ்லாமியர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹிந்து பண்டிகையை இழிவுப்படுத்தி பேசினார். தி.மு.க.வின் ஆசி பெற்ற யூ டியூப் சேனலான ’கருப்பர் கூட்டம்’ கந்த சஷ்டி கவசத்தையும், முருக பெருமானையும் இழிவுப்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, மற்றொரு யூ டியூப் சேனலான ‘யூ 2 புரூட்டஸ்’ சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தி காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தது.

இப்படியாக, தி.மு.க.வும். அதன் ஆசி பெற்ற யூ டியூப் சேனல்கள் ஹிந்துக்களை தொடர்ந்து புண்புடுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சாரக இருப்பவர் துரைமுருகன். இவர், கோடிகணக்கான ஹிந்துக்களால் போற்றி வணங்கப்படும் திருஞானசம்பந்தரை இழிவுப்படுத்தியுள்ளார். அதாவது, திருஞானசம்பந்தர் அழுத போது பார்வதி தேவி வந்து பால் கொடுத்தார். ஏன்? பால் கொடுத்தார் அந்த குழந்தை அவாள் ( பிராமணர் ) குழந்தை அந்த காரணத்தினால் தான் தேவி நேரில் வந்து பால் கொடுத்தார். இவால் குழந்தை அழுது இருந்தால் கத்தி கத்தியே செத்து போய் இருக்கும் என பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it