பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் பலாத்காரம்: ராஜா ஷேக் கைது!

பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் பலாத்காரம்: ராஜா ஷேக் கைது!

Share it if you like it

பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்ணை பலாத்காரம் செய்த ராஜா ஷேக் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

பேய் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றிய விவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பேய் ஓட்டுதல், மாந்திரகம், நரபலி என போலி மந்திரவாதிகள் மக்களை ஏமாற்றி கல்லா கட்டி வருகின்றனர். சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றனர். எனினும், இதில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறும்போதுதான் சில சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அந்த வகையில், கோடீஸ்வரராக ஆசைப்பட்டு இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவதாகக் கூறி ஒரு போலி மந்திரவாதி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு ஏற்பட்ட சொந்த பிரச்னை காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த வக்கீல் ராஜா ஷேக் என்ற மந்திரவாதியை அணுகி இருக்கிறார். அதற்கு அவரோ அப்பெண்ணுக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதாகவும், அந்த பேய்களை தானே ஓட்டி குணப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதற்காக கடந்த டிசம்பர் 29-ம் தேதி அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரச்சொல்லி இருக்கிறார்.

இதை நம்பி அப்பெண்ணும் ராஜா ஷேக் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வீட்டில் ராஜா ஷேக் தனியாக இருந்திருக்கிறார். இதனால் அப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தயங்கியபடியே வீட்டிற்குள் சென்றிருக்கிறார். எதிர்பார்த்தபோலவே, ராஜா ஷேக், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர், இதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜா ஷேக்கை கைது செய்தனர். ராஜா ஷேக் மீது எஸ்.சி. வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


Share it if you like it