நீ என்ன ஜாதி… துரைமுருகனை கிண்டல் செய்த பெரியார்!

நீ என்ன ஜாதி… துரைமுருகனை கிண்டல் செய்த பெரியார்!

Share it if you like it

என் ஜாதி குறித்து தந்தை பெரியார் தம்மிடம் கேட்டார் என அமைச்சர் துரைமுருகன் பேசிய காணொளி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், ஜாதி ஒழிப்பே எங்களது கொள்கை என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்பவர்கள் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள். ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த ஜாதியையும் அவர்கள் ஒழிக்கவில்லை என்பதே நிதர்சனம். பெரியார் இல்லை என்றால் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. தமிழகத்தின், தலையெழுத்தையே மாற்றியவர் பெரியார் என தி.மு.க. மற்றும் தி.க.வினர் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

இதனிடையே, தி.மு.க.வின் மூத்த தலைவர் துரைமுருன், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது ; தந்தை பெரியாரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிட்டியது. அப்போது, பெரியார் உன் பெயர் என்னவென்று கேட்டார். நான் துரைமுருகன் என்று கூறினேன். நீ எந்த ஊர் என்று கேட்டார் என் ஊரின் பெயரை கூறினேன். நீ எந்த ஜாதி என்று கேட்டார் வன்னியர் என்று கூறினேன். நீயும் பறையன் மாதிரிதான் என பெரியார் கூறியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பட்டியல் சமூகத்தை ஈ.வெ.ரா. எந்த கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் இவரின் பேச்சின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதுதான், தமிழகத்தில், ஈ.வெ.ரா. ஜாதியை ஒழித்த லட்சணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it