தமிழகத்தில் மீண்டும் ED ரெய்டு!

தமிழகத்தில் மீண்டும் ED ரெய்டு!

Share it if you like it

வரி ஏய்ப்பு, முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், குவாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதில் ஆவணங்கள் பறிமுதல் செய்ப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புகார் தொடர்பான வங்கி கணக்குகள் சொத்துக்ளும் முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை இன்று 40 இடங்களில் சோதனை நடத்திவருகிறது. தி.நகரில் உள்ள ஒரு அப்பாட்மெண்ட், தஞ்சையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.


Share it if you like it